இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

அமிர்தம் என்றால் விஷம்
இனியவை நாற்பது
மூவர்
தெனாலி ராமன் கதைகள்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
கனவைத் துரத்தும் கலைஞன்
முனைப்பு
பாண்டியர் காலச் செப்பேடுகள்
சாதியும் தமிழ்த்தேசியமும்
ஆலிஸின் அற்புத உலகம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பொன் மகள் வந்தாள்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
இரவல் சொர்க்கம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
பூண்டுப் பெண்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
குருதியுறவு
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
அம்பேத்கர்
தமிழக மகளிர்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சுலோசனா சதி
காலங்களில் அது வசந்தம்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
திண்ணை வைத்த வீடு
தோட்டியின் மகன்
அராஜகவாதமா? சோசலிசமா?
உருவமற்ற என் முதல் ஆண்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
Carry on, but remember!
அடுக்களை டூ ஐநா
அருளாளர்களின் அமுத மொழிகள் 


Reviews
There are no reviews yet.