இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

செம்மணி வளையல்
பாலைப் பசுங்கிளியே
தலை சிறந்த விஞ்ஞானிகள்
சுலோசனா சதி
Notes From The Gallows
குருதியுறவு
சமனற்ற நீதி
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
அந்தரம்
ஒளி பரவட்டும்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
விரட்டுவோம் வறுமையை
சிலிர்ப்பு
புனைவும் நினைவும்
வியப்பூட்டும் விண்வெளி
துரிஞ்சி
என் உயிர்த்தோழனே
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
கனவைத் துரத்தும் கலைஞன்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
சேங்கை
மோகனச்சிலை
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
தவளைகளை அடிக்காதீர்கள்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
அதிகாரம்
குமரப்பாவிடம் கேட்போம்
சட்டம் உன் கையில்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
புனைவு
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
ஆணவக் கொலைகளின் காலம்
உலக கணித மேதைகள்
சப்தரிஷி மண்டலம்
குமரி நிலநீட்சி
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
இதுவே சனநாயகம்!
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
அரண்மனை ரகசியம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
Antartica: Profits of Discovery
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
மூவர்
Carry on, but remember! 


Reviews
There are no reviews yet.