இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தக்கையின் மீது நான்கு கண்கள்
ப்ளக் ப்ளக் ப்ளக்
பிசினஸ் டிப்ஸ்
உற்சாக டானிக்
சிறுகதை எழுதுவது எப்படி?
தமிழ் வேள்வி
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
சார்வாகன் கதைகள்
பௌத்த வேட்கை
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
தோள்சீலைப் போராட்டம்
கொற்கை
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
விரட்டுவோம் வறுமையை
விலங்கு கதைகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
ட்வின்ஸ்
பற்றியெரியும் பஸ்தர்
பண்பாட்டு அசைவுகள்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
சிறுதானிய உணவு வகைகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
குதர்க்கம்
கூத்த நூல்
அன்புள்ள ஏவாளுக்கு
கல்வி முறையும் தகுதி திறமையும்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
அவஸ்தை (சிறுகதைகள்)
மூவர்
சிறுகோட்டுப் பெரும் பழம்
அறிவுரைக் கொத்து
ட்விட்டர் மொழி
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
சோழர் வரலாறு
காந்தியைச் சுமப்பவர்கள்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
அடையாளங்கள்
பையன் கதைகள்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை 


Reviews
There are no reviews yet.