இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்
இந்தியா 1944 - 48
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
கனவைத் துரத்தும் கலைஞன்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
கோவில் - நிலம் - சாதி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
கோரா
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
பிரம்ம சூத்திரம்
திருவாசகம்-மூலமும் உரையும்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
திருக்குறள் கலைஞர் உரை
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
முத்துப்பாடி சனங்களின் கதை
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
மூவர்
இவர்தாம் பெரியார்
தெனாலி ராமன் கதைகள்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
இனி
ஒரு நகரின் வீதியிலே
பாரதிதாசனும் நகரத்தூதனும்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
கச்சேரி
சந்தனத்தம்மை
சோசலிசம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
அபிதான சிந்தாமணி
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
சாத்தன் கதைகள்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
புத்ர
நினைவின் குட்டை கனவு நதி
இராவணன் வித்தியாதரனா? 


Reviews
There are no reviews yet.