இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மொழிப் போரில் ஒரு களம்
கிறித்தவமும் சாதியும்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
அமிர்தம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
கோட்சேயின் குருமார்கள்
ஆலமரத்துப் பறவைகள்
ஒளி ஓவியம்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
பனைமரச் சாலை
காமம்+ காதல்+ கடவுள்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
உ வே சாவுடன் ஓர் உலா
பாட்டிசைக்கும் பையன்கள்
தோகை மயில்
கமலி
Behind The Closed Doors of Medical Laboratories
தமிழ்த் திருமணம்
போர் தொடர்கிறது
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
மாபெரும் சபைதனில்
இரவுக்கு முன்பு வருவது மாலை
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
மிதக்கும் வரை அலங்காரம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அறம் வெல்லும்
கிராமத்து தெருக்களின் வழியே
கயமை
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
ஜாதி ஒழிப்புப் புரட்சி
திண்ணை வைத்த வீடு
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
புனைவும் நினைவும்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
அரைக்கணத்தின் புத்தகம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மூவர்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
ஆணவக் கொலைகளின் காலம்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
குல்சாரி
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
Carry on, but remember!
தலை சிறந்த விஞ்ஞானிகள்
போர்க்குதிரை
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அண்ணா சில நினைவுகள்
இரண்டாம் இடம்
Book of Quotations
நாலடியார் மூலமும் உரையும்
முனைப்பு
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மானுடம் வெல்லும்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
திருவாசகம்-மூலம்
தடம் பதித்த தாரகைகள்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பிஜேபி ஒரு பேரபாயம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
அந்தரத்தில் பறக்கும் கொடி
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
அதிகாரம்
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
அம்பேத்கர்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை 


Reviews
There are no reviews yet.