இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஒவ்வா
மாணவர்களுக்கு... (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -5)
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
செம்மீன்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
உயர்ந்த உணவு
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
இன்னொருவனின் கனவு
கூகை
நிழல்கள் நடந்த பாதை
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
மொழிப் போராட்டம்
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
பேதமற்ற நெஞ்சமடி
பதிற்றுப்பத்து
நகரம்
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
மீஸான் கற்கள்
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
ராமாயணம் எத்தனை ராமாயணம்
பிறழ்
அம்பேதகர் காட்டிய வழி
நான் நானல்ல
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 4)
மலர் விழி
உணவே மருந்து
நெருங்கி வரும் இடியோசை
முதலியார் ஓலைகள்
திருக்குறள் 3 இன் 1
ஓணம் பண்டிகை (பௌத்தப் பண்பாட்டு வரலாறு)
தேசம்மா
கருங்கடலும் கலைக்கடலும்
போர் இல்லாத இருபது நாட்கள்
குறள் 100 மொழி 100
அவமானம்
ராணா ஹமீர்
ஞானமலர்கள்
தீண்டப்படாதார்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
மகாபலிபுரம்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
தீண்டாமையை ஒழித்தது யார்?
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
செம்மொழியே; எம் செந்தமிழே!
துயரமும் துயர நிமித்தமும்
அரைக்கணத்தின் புத்தகம்
தமிழர் மதம்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
பேரரசி நூர்ஜஹான்
செயலே சிறந்த சொல்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
கல்லும் சொல்லும் கதைகள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
நீதிக் கதைகள்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஒளி ஓவியம்
ஞானாமிர்தம் 


Reviews
There are no reviews yet.