இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

கிடை
ஐந்தும் மூன்றும் ஒன்பது
அவரை வாசு என்றே அழைக்கலாம்
கற்பனைகளால் நிறந்த துளை
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
சீர்மல்கு காரைக்கால்
பாரதியார் பகவத் கீதை
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
மோகினித் தீவு
ஆயிரம் சூரியப் பேரொளி
அக்கரைச் சீமையில்
அவதாரம்
தொல்காப்பியம் (முழுவதும்)
குருதி வழியும் பாடல்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
காந்தியின் நிழலில்
தமிழ் மலர்
ந்யூமராலஜீ
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
நாலடியார் மூலமும் உரையும்
பருந்து
அரேபிய இரவுகளும் பகல்களும்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
பொன்னர் - சங்கர்
யாக முட்டை
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
கிருஷ்ணன் வைத்த வீடு
புது வீடு புது உலகம்
ருசி
காதைக் கொடு கதை சொல்கிறேன்
துரிஞ்சி
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
ஓசை மயமான உலகம்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
இது எனது நகரம் இல்லை
ஈரணு
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
கனவு விடியும்
அனந்தியின் டயறி
நைலான் கயிறு
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
புன்னகையில் புது உலகம்
நகரத்திற்கு வெளியே
கடல் ராணி
பெண்களுக்கான புதிய தொழில்கள்
யுகத்தின் முடிவில்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
தொல்காப்பியப் பூங்கா
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
பெருந்தன்மை பேணுவோம்
மோக முள்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
ஒரு புது உலகம்
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
அதிர்வு
காலத்தின் கப்பல்
இவர்தான் லெனின்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
பையன் கதைகள்
நீங்காமல் தானே நிழல் போல நானே
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
வசந்தத்தைத் தேடி
கரை சேர்த்த கட்டுமரம்
அழியாச்சொல்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
அன்பின் சிப்பி
அம்பேத்கர் காட்டிய வழி
இரும்புக் குதிகால்
பழமொழி நானூறு
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
கம்பரசம்
ஏக் தோ டீன் 


Reviews
There are no reviews yet.