இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பிரபஞ்சன் படைப்புலகம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
கற்பித்தல் என்னும் கலை
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
ரப்பர்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
சிறை என்ன செய்யும்?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
உலக இலக்கியங்கள்
கறுப்பு மை குறிப்புகள்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
கோகிலாம்பாள் கடிதங்கள்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
பெரியார் ஒரு சரித்திரம்
ஈரணு
புலியின் நிழலில்
நட்பை வழிபடுவோம் நாம்
படுகளக் காதை
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
பையன் கதைகள்
இந்தியா 1944 - 48
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
ரவிக்கைச் சுகந்தம்
என் கதை
எம்.எல்.
மகாபலிபுரம்
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
பிசினஸ் டிப்ஸ்
இராவணன் வித்தியாதரனா?
அவனி சுந்தரி
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
நுழை
பொய்த் தேவு
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
கலவரம் 


Reviews
There are no reviews yet.