இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

கருத்தாயுதம்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
தமிழர் பண்பாடும் வரலாறும்
கிருஷ்ணதேவ ராயர்
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
ஈரணு
சட்டைக்காரி
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
அறிவாளிக் கதைகள்-2
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
என் உயிர்த்தோழனே
நீதி நூல் களஞ்சியம்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
திருக்குறள் நீதி கதைகள்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
பணத்தோட்டம்
பழமொழி நானூறு
இவர்தாம் பெரியார்
பௌத்த வேட்கை
செம்பருத்தி
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
நினைப்பதும் நடப்பதும்
பலன் தரும் ஸ்லோகங்கள்
ஆபத்தில் கூட்டாட்சி
புத்ர
உப்பு நாய்கள்
இயற்கையின் விலை என்ன ?
புயலிலே ஒரு தோணி
மௌனி படைப்புகள்
பொன்னர் - சங்கர்
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
அர்த்மோனவ்கள்
இந்தியாவில் சாதிகள்
கனத்தைத் திறக்கும் கருவி
தனிமையின் நூர் வருடங்கள்
ருசி
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
அற்புதமான களஞ்சியம்
தமிழ் மலர்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
பெற்ற மனம்
டான்டூனின் கேமிரா
செயலே சிறந்த சொல்
பிற்காலச் சோழர் வரலாறு
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
சக்கிலியர் வரலாறு
பொன் மகள் வந்தாள் 


Reviews
There are no reviews yet.