இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஈரோடும் காஞ்சியும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
எங்க உப்பாவுக்கொரு ஆனையிருந்தது
சார்வாகன் கதைகள்
அம்பேத்கர்
உ வே சாவுடன் ஓர் உலா
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
திராவிடம் அறிவோம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
கிடை
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
Dictionary of Accountancy and Commerce
புனைவு
பறவைகளும் வேடந்தாங்கலும்
புனலும் மணலும்
நான் தைலாம்பாள்
உரிமைகளின் காவலன்
பேரரசி நூர்ஜஹான்
அரண்மனை ரகசியம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
அறம்
தலைமைப் பண்புகள்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
புகார் நகரத்துப் பெருவணிகன்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
கடலும் மகனும்
இந்து தமிழ் இயர்புக் 2021
எங்கே உன் கடவுள்?
ரப்பர்
கோடை மழையின் முதல் துளிகள்
யாசுமின் அக்கா
பள்ளிக்கூடத் தேர்தல்
அழகிய பெரியவன் கதைகள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
தோள்சீலைப் போராட்டம்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
வில்லி பாரதம் (பாகம் - 4)
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
புருஷவதம்
முமியா: சிறையும் வாழ்வும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
அப்போதே சொன்னேன்
என்னுடைய பெயர் அடைக்கலம்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
கனாமிஹிர் மேடு
திருவாசகம் மூலமும் உரையும்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
கி.ராஜநாராயணன் கதைகள்
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
அறிவுரைக் கொத்து
குற்றப் பரம்பரை
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் 


Reviews
There are no reviews yet.