இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஆஞ்சநேயர்
பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
ததாகம்
எனப்படுவது
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
தோகை மயில்
துயரமும் துயர நிமித்தமும்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
கூத்த நூல்
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
அறியப்படாத தமிழ்நாடு
துரிஞ்சி
கண்பேசும் வார்த்தைகள்
சிரி.. சிரி.. சிறகடி!
இலக்கிய வரலாறு
மூங்கில் பூக்கும் தனிமை
அக்கடா
கொரோனா வீட்டுக் கதைகள்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
நினைவின் குட்டை கனவு நதி
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
கல்வி முறையும் தகுதி திறமையும்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
வெக்கை
ஜோன் ஆஃப் ஆர்க்
தமிழ் மலர்
பெண் விடுதலை
காயப்படும் நியாயங்கள்
சுந்தரகாண்டம்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
நாலடியார் மூலமும் உரையும்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
கரை சேர்த்த கட்டுமரம்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
சில்மிஷ யோகா
யாக முட்டை
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கனாமிஹிர் மேடு
வில்லி பாரதம் (பாகம் - 1)
ஆரிய மாயை
கிடை
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
மனம் உருகிடுதே தங்கமே!
இந்து தமிழ் இயர்புக் 2021
நிச்சயதார்த்தம்
தொல்காப்பியப் பூங்கா
பயணம்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
ருசி
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
திரையும் வாழ்வும்
திருக்குறள் நீதி கதைகள்
சினிமா அரசியலும் அழகியலும்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
மூவர்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
மதமும் மூடநம்பிக்கையும்
அறமும் அரசியலும்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
அரைக்கணத்தின் புத்தகம்
கச்சேரி
என்னுடைய பெயர் அடைக்கலம்
கற்றுக்கொடுக்கிறது மரம்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
சாதனையை நோக்கிய பயணம்
செம்பருத்தி
சுழலும் சக்கரங்கள்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கனல் வட்டம்
உப்பு நாய்கள்
ஆயிரம் சூரியப் பேரொளி
ஆபத்தில் கூட்டாட்சி
தலைமைப் பண்புகள் 


Reviews
There are no reviews yet.