இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

இந்தி போர் முரசு
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
துரிஞ்சி
திருக்குறள் - புதிய உரை
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
சாய்வு நாற்காலி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பணியில் சிறக்க
புருஷவதம்
என்னுடைய பெயர் அடைக்கலம்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
நினைவுகளின் பேரலைகள்
வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
உழைக்கும் மகளிர்
பெரியார் கருவூலம்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
பண்பாட்டு அசைவுகள்
தொல்காப்பியம் (முழுவதும்)
சுந்தரகாண்டம்
வசந்தத்தைத் தேடி
மாதவனின் அடிச்சுவட்டில்...
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
புறப்பாடு
அறிவியல் வளர்ச்சி வன்முறை
நினைவின் குட்டை கனவு நதி
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
சோசலிசம்தான் எதிர்காலம்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
சந்தனத்தம்மை
மேடையில் பேச வேண்டுமா?
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
கொரங்கி
சிலிங்
விடுதி
கயமை
நீங்களும் வெற்றியாளர்தான்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
அடி(நாவல்)
அறியப்படாத தமிழகம்
இனிய நீதி நூல்கள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
அறிவாளிக் கதைகள்-1
பெற்ற மனம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
இரண்டாம் இடம்
விநாயக்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
கோயிற்பூனைகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
பொய் மனிதனின் கதை
யாசகம்
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
சம்பிரதாயங்கள் சரியா?
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
ஓடை
அர்த்தசாஸ்திரம்
எல்லை வீரர்கள்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
சிரஞ்சீவி
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
அரேபியப் பெண்களின் கதைகள்
பீலர்களின் பாரதம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
இதுவரையில்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
எங்கே உன் கடவுள்?
பிள்ளைக் கனியமுதே
யாசுமின் அக்கா
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
சாமிமலை
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
காலவெளிக் கதைஞர்கள்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
கேரளா கிச்சன்
தமிழ் மலர்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) 


Reviews
There are no reviews yet.