இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஆத்திசூடி மீள் வாசிப்பு
புனிதாவின் பொய்கள்
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
புறநானூறு (முதல் பாகம்)
அறிவாளிக் கதைகள்-1
காந்தியைக் கடந்த காந்தியம்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
மஹத் சத்தியாகிரகம்
என் கதை
பிற்காலச் சோழர் வரலாறு
அரேபியப் பெண்களின் கதைகள்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
குல்சாரி
அத்தைக்கு மரணமில்லை
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
சாதனையை நோக்கிய பயணம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
நீலம்
செம்மணி வளையல்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பணத்தோட்டம்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
அலர் மஞ்சரி
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
சோழர் வரலாறு
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
கவிதையும் மரணமும்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
சன்னத்தூறல்
பொன் மகள் வந்தாள்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
அரேபிய இரவுகளும் பகல்களும்
லீலை
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
THE OLD MAN AND THE SEA
யாக்கை
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
The Old Man and The Sea
ட்விட்டர் மொழி
கிழிபடும் காவி அரசியல்
ஜீவனாம்சம்
பச்சை இலைகள்
யாசுமின் அக்கா
குற்றப் பரம்பரை 


Reviews
There are no reviews yet.