இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சிலப்பதிகாரச் சுருக்கம்
மீறல்
வரலாற்று மானிடவியல்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
எங்கே உன் கடவுள்?
மொழியைக் கொலை செய்வது எப்படி?
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
ஆலமரத்துப் பறவைகள்
பாண்டியர் வரலாறு
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
நகரத்திற்கு வெளியே
சாவுக்கே சவால்
மேடையில் பேச வேண்டுமா?
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
ஓடை
சிறந்த கட்டுரைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
கோரா
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
வில்லி பாரதம் (பாகம் - 2)
பசி
நாட்டுப்புற கலைகள்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
கேளடா மானிடவா
கனாமிஹிர் மேடு
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
கோலப்பனின் அடவுகள்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காலா பாணி
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
அறம் வெல்லும்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
ஈரோடும் காஞ்சியும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
பூண்டுப் பெண்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
ஆவி உலகம்
வில்லி பாரதம் (பாகம் - 1)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ஒளி பரவட்டும்
அஞ்சும் மல்லிகை
கருத்தாயுதம்
பைசாசம்
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம் 


Reviews
There are no reviews yet.