இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பெயரே வெற்றிக்கான ஆதாரம்
வில்லி பாரதம் (பாகம் - 2)
குருதியுறவு
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
மேடையில் பேச வேண்டுமா?
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
தீண்டாத வசந்தம்
மீறல்
நீலம்
இந்து மதத் தத்துவம்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
பொன் மகள் வந்தாள்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
ஒற்றைச் சிறகு ஒவியா
விடுதி
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
கிராம சீர்திருத்தம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
மூவர்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
சோசலிசம்
பனியன்
அகாலம்
அறியப்படாத தமிழகம்
நாங்கள் அவர்கள்
ஈரணு
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
அரைக்கணத்தின் புத்தகம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
அறிவாளிக் கதைகள்-1
அரேபிய இரவுகளும் பகல்களும்
எங்கே உன் கடவுள்?
அறமும் அரசியலும்
ஞானாமிர்தம்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
காதல் சரி என்றால் சாதி தப்பு
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
சந்தனத்தம்மை
சோசலிசம்தான் எதிர்காலம்
செயலே சிறந்த சொல்
காற்றின் உள்ளொலிகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
புனைவின் வரைபடம்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
சக்கிலியர் வரலாறு
பழங்காலத் தமிழர் வாணிகம்
இவர்தான் லெனின்
சுந்தரகாண்டம்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
தூத்துக்குடி நினைவலைகள்
கயமை
நாயகன் - பெரியார்
ஆஞ்சநேயர்
பிஜேபி ஒரு பேரபாயம்
அறிவுத் தேடல்
வன்னியர்
சமஸ்கிருத ஆதிக்கம்
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
போர் தொடர்கிறது
ரப்பர்
புனைவு
பள்ளிக்கூடத் தேர்தல்
அலர் மஞ்சரி
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
பழமொழி நானூறு
ம்
அடையாளங்கள்
வித்தியாச ராமாயணம்
செம்பருத்தி
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
காமம்+ காதல்+ கடவுள் 


Reviews
There are no reviews yet.