இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மீஸான் கற்கள்
கோவாவில் மதமாற்றம் - துயரக் கதை
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
திருமந்திரம் மூலம் முழுவதும்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
எனது இந்தியா
தலித்துகள் – நேற்று இன்று நாளை
நெஞ்சம் மறப்பதில்லை
நீங்காமல் தானே நிழல் போல நானே
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-9)
இரயில் புன்னகை
மீள் வருகை
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
உயிரோடு உறவாடு
காவி - கார்ப்பரேட் - மோடி
திருவிளையாடற் புராணம்
தமிழ் கவிதையியல்
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
நாயகன் - கார்ல் மார்க்சு
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
தொல்குடித் தழும்புகள்
தெய்வங்களும் சமூக மரபுகளும்
நான் இந்துவல்ல நீங்கள்?
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
புதுமைப்பித்தனுக்குத் தடை
கழிமுகம்
நிழல் படம் நிஜப் படம்
பெர்லின் நினைவுகள்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
சார்வாகன் கதைகள்
கொம்மை
பெருந்தன்மை பேணுவோம்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
என் சரித்திரம்
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
நெருங்கி வரும் இடியோசை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
காலத்தின் கப்பல்
ஏழாம் வானத்து மழை
இந்து தேசியம்
பொன் விலங்கு
மருத்துவ டிப்ஸ்
குழந்தைகளைப் புகழுங்கள்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை? 


Reviews
There are no reviews yet.