இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஆசியாவின் பொறியியல் அதிசயம்!
பிரதமன்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
நளபாகம்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
சிங்கப் பெண்ணே
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
தனிமையின் நூறு ஆண்டுகள்
இதுவே சனநாயகம்!
யாசகம்
கரிசல் காட்டுக் கடுதாசி
சூடு... சொரணை...சுயமரியாதை...
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மன்னர்களும் மனு தருமமும்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
தலைமுறைக்கும் போதும்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
தலைமறைவான படைப்பாளி
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
மோகனச்சிலை
திண்ணைப் பேச்சு
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
ஒரு கல்யாணத்தின் கதை
செம்பியன் செல்வி
காவி - கார்ப்பரேட் - மோடி
நினைப்பதும் நடப்பதும்
காலத்தின் கப்பல்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
நான் இந்துவல்ல நீங்கள்?
எறும்பும் புறாவும்
கனவு மலர்ந்தது
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
நிழல்கள்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
நீண்ட காத்திருப்பு
இவர்தான் லெனின்
சூதாடி
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
கனவு விடியும்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
லாவண்யா
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
அன்பிற் சிறந்த தவமில்லை
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
ஞானத்தின் சிறிய புத்தகம்
வித்தியாச ராமாயணம்
வர்ம ஞான சித்தர்கள்
பணம் சில ரகசியங்கள்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
அறிந்ததினின்றும் விடுதலை
அம்பை கதைகள் (1972 - 2014)
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
மலை அரசி
பிணைக்கைதி
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
இவர்தான் கலைஞர்
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
பீலர்களின் பாரதம்
நாலடியார் (மூலமும் உரையும்)
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
மேல் கோட்டு
அறிவாளிக் கதைகள்-1
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
ஆய்வும் தேடலும்
குற்ற உணர்வு
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
நிழல்கள் நடந்த பாதை
நிறைய அறைகள் உள்ள வீடு
தமிழரின் பரிணாமம்
தித்திக்கும் திருமணம்
பார்த்திபன் கனவு
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
கணிதமேதை இராமானுஜன்
மயிலிறகு குட்டி போட்டது
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
சோழர் வரலாறு
திருக்குறள் பரிமேலழகர் உரை
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்? 


Reviews
There are no reviews yet.