இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார்.
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.
நன்றி – தினமணி

அமிர்தம் என்றால் விஷம்
இனியவை நாற்பது
மூவர்
தெனாலி ராமன் கதைகள்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
கனவைத் துரத்தும் கலைஞன்
முனைப்பு
பாண்டியர் காலச் செப்பேடுகள்
சாதியும் தமிழ்த்தேசியமும்
ஆலிஸின் அற்புத உலகம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பொன் மகள் வந்தாள்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
இரவல் சொர்க்கம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
பூண்டுப் பெண்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
குருதியுறவு
அடையாள மீட்பு: காலனிய ஓர்மை அகற்றல்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
அம்பேத்கர்
தமிழக மகளிர்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சுலோசனா சதி
காலங்களில் அது வசந்தம்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
திண்ணை வைத்த வீடு
தோட்டியின் மகன்
அராஜகவாதமா? சோசலிசமா?
உருவமற்ற என் முதல் ஆண்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
Carry on, but remember!
நீலக் கடல்
திராவிடர் - ஆரியர் உண்மை
பொய்த் தேவு
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
பசலை ருசியரிதல்
சோசலிசம்
மாபெரும் சபைதனில்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
மிதக்கும் வரை அலங்காரம்
கம்பரசம்
பனியன்
அறிவுத் தேடல்
அரைக்கணத்தின் புத்தகம்
நீங்களும் வெற்றியாளர்தான்
விடுபூக்கள்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
நினைவோ ஒரு பறவை
திருவாசகம் பதிக விளக்கம்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
பசுவின் புனிதம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
பணத்தோட்டம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சாவுக்கே சவால்
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
மத்தவிலாசப் பிரகசனம்
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
சன்னத்தூறல்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
காதல்
ஐந்து விளக்குகளின் கதை
'ஷ்' இன் ஒலி 
Reviews
There are no reviews yet.