பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அரசியல் / Political
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

அக்கடா
Caste and Religion
1974 – மாநில சுயாட்சி
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Arya Maya (THE ARYAN ILLUSION)
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
உடையார் (ஆறு பாகங்களுடன்)
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
ஸ்ரீ ஜானகி இராமாயணம்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் (உத்தர காண்டம்)
16 கதையினிலே
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
பயன் தரும் பயணங்கள்
அபிதா