பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

ஐந்து வருட மௌனம்
கலைஞர் காவியம்
ஞானத்தின் சிறிய புத்தகம்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
மோடி மாயை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
தியாகத்தலைவர் காமராஜர்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
வண்ணநிலவன் சிறுகதைகள்
சுகவாசிகள்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
பகட்டும் எளிமையும்
குழந்தைகள் நிறைந்த வீடு
கனவு மலர்ந்தது
நயத்தகு நாகரிகம்
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
பாளையங்கோட்டை நினைவலைகள்
ரவிக்கைச் சுகந்தம்
இராமாயணப் பாத்திரங்கள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
தந்தையின் காதலி
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
பெண் மணம்
ரத்த மகுடம்
சித்தி தரும் சக்தி பீடங்கள்
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
ஞானபீடம்
என் சரித்திரம்
தன்னை உணர்தல்
நங்கை உந்தன் ஜோதிமுகம்
நீதி சொல்லும் கதைகள்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
மதமும் சமூகமும்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
நா.முத்துக்குமார் கவிதைகள்
கண்ணகி தொன்மம்
பாரதி கவிதைகள்
நீதி - ஒரு மேயாத மான்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
திஸ்தா நதிக்கரையின் கதை
தமிழ் இரயில் கதைகள்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)