தினம் ஒரு தியான மலர்

Publisher:

100.00

தினம் ஒரு தியான மலர்

100.00

DINAM ORU DHIYANA MALAR

பகவான் இராமகிருஷ்ணர் செல்வார்: “குளத்தில் மீன்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஓர் இரையைப் போட்டதும் எப்படி நாலா பக்கங்களிலும் இருந்து அதனிடம் ஓடி வருகின்றனவோ அதேபோல் நீங்கள் மனமுருகிச் செய்யும் பிரார்த்தனை இறைவன் எங்கிருப்பினும் அவனை உங்கள் பக்கம் ஈர்ப்பது நிஜம்” என்று. ‘உன் மனதையே ஜெபமாலையாக்கி பிரார்த்தனை செய்’ என்பார் கபீர்தாசர். ‘துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது, வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது, மனம் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். அதற்குப் பிரார்த்தனை தான் சிறந்த வழி’ என்பார் காஞ்சிப் பெரியவர். தினம் ஒரு தியான மலராய் ஆண்டு முழுவதும் நீங்கள் இறைவனைத் தியானித்து, பிரார்த்தனை செய்திட ஓர் அழகிய மாலையாய் இந்நூலைத் தொடுத்துள்ளோம்.

Delivery: Items will be delivered within 2-7 days