ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உறக்கமின்மைக் கொள்ளை நோயும் உள்நாட்டுப் போர்களும் பழிவாங்கல்களும் அந்த நகரத்தின் வரலாற்றை உருவாக்குகின்றன. உலகின் மிகப் பெரிய வைரம் என்று ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவால் வர்ணிக்கப்படும் பனிக்கட்டியைப்போல மகோந்தா நகரமும் காலத்தின் வெம்மையில் கரைந்து மறைகிறது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.

தீண்டப்படாத முத்தம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
Quiz on Computer & I.T.
சிறை என்ன செய்யும்?
தமிழ்நாட்டு நீதிமான்கள்
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ஆயன்
ஸ்ரீ மஹா பக்த விஜயம்
திருக்குறள் பரிமேலழகர் உரை
வெற்றிக்கு சில புத்தகங்கள் – பாகம் 1
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam) 


Reviews
There are no reviews yet.