இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சாண்டோ சின்னப்பா தேவர்
கேரளா கிச்சன்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
திருக்குறள் ஆராய்ச்சி
பகவான் ரஜனீஷின் (ஒஷோ) தியான முறைகள்
அசோகர்
திருக்குறள் கலைஞர் உரை
கிராமத்து தெருக்களின் வழியே
பேரரசி நூர்ஜஹான்
சாமிமலை
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
நாய்கள்
சமனற்ற நீதி
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
பணத்தோட்டம்
என்னுடைய பெயர் அடைக்கலம்
மேடையில் பேச வேண்டுமா?
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
செம்பருத்தி
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பாதைகள் உனது பயணங்கள் உனது
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
அபிதான சிந்தாமணி
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
தடம் பதித்த தாரகைகள்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
முத்துப்பாடி சனங்களின் கதை
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
இனி
தீண்டாத வசந்தம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
வியப்பின் மறுபெயர் வீரமணி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
நரக மயமாக்கல்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
உலக கணித மேதைகள்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
திண்ணை வைத்த வீடு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
மேடம் ஷகிலா
போர் தொடர்கிறது
சட்டம் பெண் கையில்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
குருதியுறவு
கோட்சேயின் குருமார்கள்
சாதனைகள் சாத்தியமே
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
இந்து மதத் தத்துவம்
நினைவுப்பாதை
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
நால்வர் தேவாரம்
இனிய நீதி நூல்கள்
இந்து ஆத்மா நாம்
இரும்பு பட்டாம் பூச்சிகள் 


Reviews
There are no reviews yet.