இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013
கண்ணாடி சத்தம்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
எங்கே உன் கடவுள்?
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
திருமந்திரம் மூலமும் உரையும்
வில்லி பாரதம் (பாகம் - 5)
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
அடுத்த வீடு ஐம்பது மைல்
உணவே மருந்து
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ருசி
தலைமைப் பண்புகள்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
பாதைகள் உனது பயணங்கள் உனது
காலத்தை வெல்லும் திருமுறைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
பொன் விலங்கு
விபரீத ராஜ யோகம்
பாடலென்றும் புதியது
21 ம் விளிம்பு
மொழி உரிமை
கலங்கிய நதி
சாதியும் நானும்
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
புறப்பாடு
மூவர்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
புரந்தரதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
நாவல் பழ இளவரசியின் கதை
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
இலை உதிர் காலம்!
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
தலைமுறைகள்
அறம்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
ஞானபீடம்
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
சொக்கரா
அன்னை வயல்
சிவ புராணம்
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
யாருமே தடுக்கல
கண்ணகி
கலைஞரின் பெரியார் நாடு!
தலைகீழ் விகிதங்கள்
கடவுள் காப்பியம்
அமிர்தம்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
உலகை வெல்ல உன்னை வெல்
கிருஷ்ண காவியம்
கரியோடன்
இதய ரோஜா
இனிய நீதி நூல்கள்
SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
துறைமுகம்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிந்தனை விருந்து
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தினமும் ஒரு புது வசந்தம்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
சான் ஃபிரான்ஸிஸ்கோ: ஒரு தமிழரின் பார்வையில்
கொம்மை
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
சக்கிலியர் வரலாறு
பாண்டியர் வரலாறு
கணிதமேதை இராமானுஜம்
அடையாளங்கள் 


Reviews
There are no reviews yet.