இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 வற்றாநதி
வற்றாநதி						 புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை						 தத்துவத்தின் வறுமை
தத்துவத்தின் வறுமை						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)						 ஒரு பாய்மரப் பறவை
ஒரு பாய்மரப் பறவை						 ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 விழுவதும் எழுவதும்
விழுவதும் எழுவதும்						 எம்.எல்.
எம்.எல்.						 நமக்கு ஏன் இந்த இழிநிலை?
நமக்கு ஏன் இந்த இழிநிலை?						 அறிவுரைக் கொத்து
அறிவுரைக் கொத்து						 தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்நாட்டு நீதிமான்கள்						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 புலிப்பால்: நாவினால் சுட்டவடு
புலிப்பால்: நாவினால் சுட்டவடு						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 சிவ ஸ்தலங்கள் 108
சிவ ஸ்தலங்கள் 108						 கிராம சீர்திருத்தம்
கிராம சீர்திருத்தம்						 ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 ஒரு  வழிப்போக்கனின்  வாழ்க்கை பயணம்
ஒரு  வழிப்போக்கனின்  வாழ்க்கை பயணம்						 மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்						 நீங்காமல் தானே நிழல் போல நானே
நீங்காமல் தானே நிழல் போல நானே						 பாடலென்றும் புதியது
பாடலென்றும் புதியது						 அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?						 குந்தரின் கூதிர்காலம்
குந்தரின் கூதிர்காலம்						 அவனி சுந்தரி
அவனி சுந்தரி						 கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்						 அன்பே ஆரமுதே
அன்பே ஆரமுதே						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 நால்வர் தேவாரம்
நால்வர் தேவாரம்						 அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்						 உரிமைகளின் காவலன்
உரிமைகளின் காவலன்						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 நல்லதாக நாலு வார்த்தை
நல்லதாக நாலு வார்த்தை						 பிணைக்கைதி
பிணைக்கைதி						 போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						 கரிசல் காட்டுக் கடுதாசி
கரிசல் காட்டுக் கடுதாசி						 இந்து தேசியம்
இந்து தேசியம்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 மூங்கில் பூக்கும் தனிமை
மூங்கில் பூக்கும் தனிமை						 ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்						 சுயமரியாதைத் திருமணம் ஏன்?
சுயமரியாதைத் திருமணம் ஏன்?						 நீதி நூல் களஞ்சியம்
நீதி நூல் களஞ்சியம்						 அற்புதமான களஞ்சியம்
அற்புதமான களஞ்சியம்						 தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்						 உடைந்த நிழல்
உடைந்த நிழல்						 இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!						 நகரத்திற்கு வெளியே
நகரத்திற்கு வெளியே						 நல்லாரைக் காண்பதுவும்
நல்லாரைக் காண்பதுவும்						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 ட்விட்டர் மொழி
ட்விட்டர் மொழி						 அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை						 அரேபிய இரவுகளும் பகல்களும்
அரேபிய இரவுகளும் பகல்களும்						 ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்						 அறம்
அறம்						 கனாமிஹிர் மேடு
கனாமிஹிர் மேடு						 ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்						 செம்மணி வளையல்
செம்மணி வளையல்						


Reviews
There are no reviews yet.