இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 தேவமலர்
தேவமலர்						 இவர்தாம் பெரியார்
இவர்தாம் பெரியார்						 மரநாய்
மரநாய்						 எனப்படுவது
எனப்படுவது						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)						 சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 கோவில் - நிலம் - சாதி
கோவில் - நிலம் - சாதி						 இலை உதிர் காலம்!
இலை உதிர் காலம்!						 காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்						 வசந்தத்தைத் தேடி
வசந்தத்தைத் தேடி						 வளமான சொற்களைத் தேடி
வளமான சொற்களைத் தேடி						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 உனது  வானம்  எனது ஜன்னல்
உனது  வானம்  எனது ஜன்னல்						 வன்னியர்
வன்னியர்						 பனைமரச் சாலை
பனைமரச் சாலை						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)						 முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 பருந்து
பருந்து						 தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்						 வகை வகையான அசைவ சமையல்கள்
வகை வகையான அசைவ சமையல்கள்						 பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 நீதிநூல்கள்
நீதிநூல்கள்						 மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்						 அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?						 ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்						 பெண் விடுதலை
பெண் விடுதலை						 விடுபூக்கள்
விடுபூக்கள்						 மீறல்
மீறல்						 அண்ணன்மார் சுவாமி கதை
அண்ணன்மார் சுவாமி கதை						 பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்						 பிடி சாம்பல்
பிடி சாம்பல்						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						


Reviews
There are no reviews yet.