பன்முக ஆளுமை மு. அருணாசலம்

Publisher:
Author:

Original price was: ₹280.00.Current price is: ₹270.00.

பன்முக ஆளுமை மு. அருணாசலம்

Original price was: ₹280.00.Current price is: ₹270.00.

‘அறிதல்’ என்னும் செயற்பாட்டுள் மூழ்கிப் பெறும் இன்பமும் பிறர் உயர்வில் தான் பெறும் இன்பமும் உயிர்பெறும் இன்பங்கள் ஆகும்.

ஆயிரம் துயர் தாங்கிப் பெறும் இந்த இன்பமே ஒரு வாழ்வை வரலாறாக்குகிறது.

அறிவிற்குத் தமிழையும் ஆன்மீகத்திற்குச் சைவத்தையும் சமுதாயத்திற்கு காந்தீயத்தையும் ஏற்ற மு.அ. அவர்கள் தன் வாழ்வின் அனைத்து கணங்களையும் தமிழினத்திற்கு அர்ப்பணித்தவர்.

ஓயாத தேடுதலால் தன்னைச் செதுக்கிச் செப்பனிட்டுக் கொண்டவர். அவ்வாற்றலால் துறைதோறும் துறைதோறும் தமிழை உயர்த்தியவர்.

வியக்கச் செய்யும் கருத்து உழைப்பாளி.

அறியப்பட வேண்டியவர்களை அறியாமல் இருப்பதே தமிழினம் தன்னை உணராது தவித்துத் தடுமாறுவதன் காரணம் மு.அ.அவர்கள் அறியப்பட வேண்டியவர் என்பதை உணர்ந்ததாலேயே பணிச்சுமை, குடும்பச்சுமை, அனைத்தையும் தாங்கி, கள ஆய்வு நிகழ்த்தி, அவர்தம் வாழ்வையும் தந்த வளத்தையும் ஆய்ந்து நூலாக்கியுள்ளார் பேராசிரியர் முனைவர் சுடர்விழி !

நல்லாசிரியர், நுட்பமான ஆய்வாளர், ஆற்றல்மிகு பேச்சாளர் எனப் பன்முகம் கொண்ட சுடர்விழி எனும் ஆளுமையின் எல்லையற்ற ஆர்வத்தையும் பேருழைப்பையும் இயம்புகின்றன இந்நூலின் பக்கங்கள்.

– பேராசிரியர் பாரதிபுத்திரன்

Delivery: Items will be delivered within 2-7 days