1 review for அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹80.00
அரூப சுயம்: பிறழ் நிலை பிறிதொரு தோற்றம் எடுக்கையில் சிதறி இருக்கிறேன் நீர்மமாய், திண்மமாய் காற்றாயாய், மௌனமாய் கெட்டுத்திரியும் வார்த்தையோசைகளாய் அசைவுகளாய் பிரிந்து அலையும் என்னை காண சகிக்கவில்லை இராப்பொழுது மனக் கண்ணாடியில் இருந்த போதும் கனத்த வேடங்களால் தொங்கியலைந்து தொடர்கிறது சுயம். இரத்த ஓட்டமற்ற உறுப்பினைப் போல…
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
அனைத்தும் / General
ப. தாணப்பன் –
#அசைந்தபடியேஇருக்கிறதுதூண்டில்…
#இராமதிபாலா..
மன உணர்வுகளை, அனுபவங்களை மொழி பொழியசிறு அடர் மரங்கள் போல கவிதைகளாக வளர்த்திருந்தேன். அவற்றினை ஒருங்கே கூட்டிய போது அளந்த அளவிலான ஒரு வனமாக என் எதிரே வந்து நிற்கிறது. அங்கு என் நினைவுகளை வாசிக்க நிழல் இருக்கைகளாக அமர்த்தி இருக்கிறேன் என்ற தன் உரையோடு கவிதைக்குள் நுழையச் செய்கிறார்.
எளிய வரிகளில் கவிதைகள் அமையப் பெறுவது சிறப்பு. மனதினைத் தொட்ட கவிதைகளனைத்தும் இங்கே…
” பழகிய பழக்கத்திற்காக
அறைக் கண்ணாடி
காத்திருந்தது
சில வார்த்தைகளோடு
என்
முந்தைய முகம் காட்ட”
” நெல் களங்கள் வாயில்
வாய்க்கரிசி
தோப்புகளில்
நெய் பந்தங்களின் சடசடப்பு நகரங்கள்
விழுங்கிய கிராமங்களை
எளிதாக குறிக்க
பெருநகரங்கள் எனப்
பெயரிட்டோம்”
#மௌனக்கண்கள்
தான்
வந்த அமர்ந்து போனதற்கு அடையாளமாய்
சிறகில் ஒன்றை விட்டு போனது பறவை.
சிறகு
மென்காற்றில்
உழன்றாடி, உழன்றாடி
அறையின்
தனிமை தூசியை
துடைக்கத் தொடங்கியது.
நீலும் பெருக
வாஞ்சையோடு
பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்த
முதிய கண்கள்.
#ரயிலின்முதுகு
இஞ்சியின்
மறைகிறது
பெட்டிகள் மறைக்கின்றன
முகங்கள்
மறைகின்றன
கையசைப்பை
நிறுத்த இயலவில்லை
இரயில் முதுகு
காலத்தின் முகமாகிறது.
#தேமேஎன்றொருவன்
பசியோடு இருக்கிறான்
கடவுள்
அலைந்து கொண்டிருக்கிறான் பக்தன்
பதுக்கிய உணவைத் தின்று
சிலையைச் சுற்றி
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சுண்டெலி.
#புகழ்
என்
முன்னொரு கால
தனிமையை கடக்க
உடன் வந்தாய்.
கடந்து போய்விட்டேன்
காலமாய்
இப்போது
நான் என நிற்கிறாய்
நீ.
# விளம்பரம்
கடவுளுக்கு கூட
ஒரு ஆள் வேண்டியிருக்கிறது
இவர்
கடவுள் என்று
பிறரிடம் சொல்ல…
கோயில் நடை
சாத்தப்பட்டது
கடவுள் அமர்ந்தார்
ரிலாக்ஸ்டாக….
#தவறுஎன்பதுயாதெனின்
செய்வதும், வருந்துவதும்
பின்னர்
செய்யாதிருக்க நினைப்பதும் – அதை சுலபமாய் மறப்பதுமாய்
போகிறது வாழ்க்கை.
வாழ்க்கையின் மையத்திலோ
அல்லது ஓரத்திலோ அல்லது கடைசியிலோ
நின்று கொண்டிருக்கிறது
முரன் மரம்
காய்ந்து கனிந்து தொங்குகின்றன பாவங்களும் பரிகாரங்களும்.
#பச்சையஒழிப்பு
மண்புழுக்கள்
கூட்டம் கூட்டமாய்
இடம் பெயர்கின்றன
தார் வாசம்
பிரளயம் போல
வந்து கொண்டிருக்கிறது.
#முன்னோருபொழுது
பாடல் பெய்ய பெய்ய
பயண வெளியில்
துளிர்க்கிறது
பதுங்கியிருந்த
நினைவு வனம்
அதில்
பறக்கத் துடிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
உன் சாயல்.
இதுவரையில்
நீ எங்கிருந்தாய் என்றேன்
உணர்வுக் கொம்பு காட்டிய
திசையில்
கம்பளிப்பூச்சி
” புத்தகம் படிப்பது போல நாட்குறிப்பினை
படிக்க இயலாதென
சொல்கிறது
அறையின் அமைதி
நாட்குறிப்புகளும்
கருவறைகள் போலவே.
இங்கும் ஆகம விதி போல
ஆழ்மன விதி
திரியின் வெளிச்சத்திலேயே தரிசனம்.
மனதில் ஒட்டிக்கொள்கிற மாதிரி கவிதைகள் அத்துணை எளிமையாக இருந்தது. கவிஞர் கவிதை மொழியை, வடிவத்தை எளிமைப்படுத்தியிருக்கிறாரே தவிர கவிதைக்கான கருக்களின் வீரியம் குறையவில்லை என கு. விநாயகமூர்த்தி அவர்கள் எழுதிய முன்னுரைக்கு உடன்படுகின்றேன்.
வாசிக்க வேண்டிய தொகுப்பு.
#அசைந்தபடியேஇருக்கிறதுதூண்டில்..
#இராமதிபாலா
#தேநீர்பதிப்பகம்
#பக்கங்கள் 71
#விலை 80