Veyyonin Vendhan
நாவல் என்னும் புத்திலக்கிய வகையில் மொழி வளர்ச்சி என்பது கிளைகள் பரப்பிக் கிளர்ந்தெழுகின்றது. புதிய புதிய கோணங்களில் நாவல்கள் வளர்ந்துள்ளன. வளர்ந்த வண்ணமும் உள்ளன. வாழ்க்கை வளர்ச்சிக் கேற்பச் சிந்தனை வளர்ச்சிகளும் சிகடித்துப் பறக்கின்றன. ஒரு காலத்தில் புறக்கணிக்கப்ட்ட சிந்தனைகள் மற்றொரு காலத்தில் கொண்டாடப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். அந்த வகையில் இராவணனை அசுரனாகப் பார்க்கப்பட்ட நிலைமாறி அவனை நன்னெறிகளின்படி அரசாட்சி செய்த சிறந்த மன்னனாகப் பார்க்கும் நிலை வளர்ந்துள்ளது. அந்த வகையில் இராவணன் வரலாற்றை நாவலாக்கி அழகு பார்க்கின்ற அரிய முயற்சியில் எழுந்ததே இந்த “வெய்யோனின் வேந்தன்” என்னும் நாவல். ஆற்றொழுக்கு நடையில் அமைந்து கற்போருக்குக் களிபேருவகை அளிக்கிறது. படித்துச் சுவைக்க வேண்டிய பண்பாட்டு நாவல்.
இந்த அழகிய நாவலைமண் உணர்வும் பண்பாட்டு அக்கறையும் கொண்டுள்ள திரு ஸ்ரீமதி என்பவர் எளிய நடையில் இனிய மொழியில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார். இராவணனைக் கதைத்தலைவனாகக் கொண்டு கற்கண்டு சுவையில் படைத்துள்ள ஒரு திருப்புமுனை நாவலாக விளங்குவதைப் படிப்போர் உணர்ந்து போற்றுவர்.

அல்லி
அமுதே மருந்து
உணவே மருந்து
மறக்கவே நினைக்கிறேன்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
குருதி ஆட்டம்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
கொம்மை
குற்றப் பரம்பரை 

Reviews
There are no reviews yet.