1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

குற்ற உணர்வு
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
எரியாத நினைவுகள்
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்
பெரியார் பிறவாமலிருந்தால்
மரண இதிகாசம்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
வயது வந்தவர்களுக்கு மட்டும்
அன்பின் சிப்பி
மனிதப் பிழைகள்! (நாவல்)
மறக்க முடியாத மனிதர்கள்
ஒற்றறிதல்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
மூவர்
கனவுகள்
அபாய வீரன்
முறைப்பெண்
வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
எனக்கு நிலா வேண்டும்
நண்பனின் தந்தை
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
அதிசய சித்தர் போகர்
மகா பிராமணன்
உலக இலக்கியங்கள்
ஆலமரத்துப் பறவைகள்
கனவின் யதார்த்தப் புத்தகம்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
தமிழகப் பாறை ஓவியங்கள்
பிடி சாம்பல்
நீல நாயின் கண்கள்
நீர்க்குமிழி நினைவுகள்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
கற்பித்தல் என்னும் கலை
அழகிய பெரியவன் கதைகள்
உயர்ந்த உணவு
வெற்றி தரும் கருட தரிசனம்
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
குருதி ஆட்டம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
வளமாக்கும் பொழுதுபோக்கு
PIXEL
சூரியனைத் தொடரும் காற்று
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
புலரி
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
கணவன் சொன்ன கதைகள்
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
நல்லவண்ணம் வாழலாம்
முமியா சிறையும் வாழ்வும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
புயலிலே ஒரு தோணி
சுமித்ரா
ஜென் தத்துவக் கதைகள்
அண்டசராசரம்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
திருக்குறளும் பரிமேலழகரும்
நாயகன் - சார்லி சாப்ளின்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
மனிதனுக்கு ஒரு முன்னுரை
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
பெரியாருடன் வீரமணி
அன்னா ஸ்விர் கவிதைகள்
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
தரூக்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
பூ மகள் வந்தாள்
மோடி மாயை
வகுப்புரிமை போராட்டம்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
அவளது வீடு
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
ஆடிப்பாவை போல
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
ஒவ்வா
மனத்தில் உறுதி வேண்டும்
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
இலக்கிய வரலாறு
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
இதயநாதம்
கலை இலக்கியம்
கற்றதால்
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
அப்பனின் கைகளால் அடிப்பவன்
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
பிரக்சிட்
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
எட்டயபுரம்
தென் இந்திய வரலாறு
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
முதலியார் ஓலைகள்
நீடிக்கும் வெற்றி
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
உதவிக்கு நீ வருவாயா?
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
சூல்
ஒரு பிடி அரிசி
சுகவாசிகள்
மயானத்தில் நிற்கும் மரம்
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
விடுதலை களஞ்சியம் (தொகுதி - 1)
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
மக்களின் அரசமைப்பு சட்டம்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
உணவே மருந்து
மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம்
நபி பெருமானார் வரலாறு
பாளையங்கோட்டை நினைவலைகள்
இது கறுப்பர்களின் காலம்
நாஞ்சில் நாட்டு உணவு
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எதுவாக இருக்கும்?
அவள் ராஜா மகள்
அந்த நாள்
இந்திய பயணக் கடிதங்கள்
தனித்தலையும் செம்போத்து
தொல்காப்பியம் விளக்கவுரை
தலித்துகளும் தண்ணீரும்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
ஆலிஸின் அற்புத உலகம்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கருங்கடலும் கலைக்கடலும்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
நானும் என் எழுத்தும்
உண்மை விளக்கம் (உரை நூல்)
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
எண்ணித் துணிக கருமம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
தங்கர்பச்சான் கதைகள்
பொங்கி வரும் புது வெள்ளம்
குடும்பமும் அரசியலும்
தினமும் ஒரு புது வசந்தம்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்) 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57