ACHU PANPAATIL AADHI DRAVIDAR ARIVU MARABU
ஐரோப்பியர் அச்சுப் பண்பாட்டை அறிமுகம் செய்த காலத்திலிருந்தே ஆதி திராவிடரின் அறிவு மரபும் இந்தத் துறைக்குப் பங்களித்துவருகிறது. இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘பூலோகவியாஸன்’ அத்தகைய பங்களிப்புகளில் ஒன்று. 1905-06 ஆண்டுகளில் வெளியான இந்த இதழ், திருக்குறள், நீதிசாத்திரம், இலஞ்சம், சாதி, பெண்கள், தத்துவம், தானம், தேகம், தர்பார், உழவர், இசை, மதுவிலக்கு என அனைத்தையும் குறித்து உரையாடியது; றகர, ரகர பேத விளக்கத்தையும் இந்த இதழ் தொடர்ந்து வெளியிட்டுவந்தது. தமிழ்ச் சமூகத்தில் அச்சுப் பண்பாடு, இதழியல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஆதி திராவிடர்கள் ஆற்றியுள்ள காத்திரமான பங்களிப்புக்குச் சாட்சியாய் நிற்கிறது ‘பூலோகவியாஸன்’.
Reviews
There are no reviews yet.