இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
கோடுகள் இல்லாத வரைபடம்
சங்க இலக்கியச் சோலை
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
ட்விட்டர் மொழி
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
கனவைத் துரத்தும் கலைஞன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
மாபெரும் சபைதனில்
தெனாலி ராமன் கதைகள்
அந்தரம்
சாலாம்புரி
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
Behind The Closed Doors of Medical Laboratories
சக்தி வழிபாடு
சாதியும் தமிழ்த்தேசியமும்
Notes From The Gallows
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
பிஜேபி ஒரு பேரபாயம்
குண்டலினி எளிய விளக்கம்
பணத்தோட்டம்
திருக்குறள் 6 IN 1
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
அராஜகவாதமா? சோசலிசமா?
சாதனையை நோக்கிய பயணம்
நீங்களும் வெற்றியாளர்தான்
மரபும் புதுமையும் பித்தமும்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
மானுடம் வெல்லும்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
ஏக் தோ டீன்
பசலை ருசியரிதல்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சக்கிலியர் வரலாறு
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
Antartica: Profits of Discovery
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
கடவுளும் மனிதனும்
திருக்குறள் கலைஞர் உரை
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
திண்ணை வைத்த வீடு
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
திருவாசகம் பதிக விளக்கம்
சோசலிசம்
சந்திரஹாரம்
பலசரக்கு மூட்டை
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
கோட்சேயின் குருமார்கள்
அறியப்படாத தமிழகம்
அந்த நேரத்து நதியில்... 


Reviews
There are no reviews yet.