இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வரலாறும் வளர்ச்சியும்
உலகை ஆளும் மந்திரம்
காமாட்சி அந்தாதி
சிங்கப் பெண்ணே
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
கலாபன் கதை
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
தமிழ் வேள்வி
பொய்யும் வழுவும்
தமிழகத்தின் வருவாய்
திருமந்திரம் மூலம் முழுவதும்
பசலை ருசியறிதல்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
மரணத்தின் பின் மனிதர் நிலை
1958
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
சிறு புள் மனம்
சிலிர்ப்பு
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
சுகவாசிகள்
ராஜன் மகள்
தமிழ் நவீனமயமாக்கம்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
திண்ணைப் பேச்சு
கடலுக்கு அப்பால்
அறிந்ததினின்றும் விடுதலை
குறள் 100 மொழி 100
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
கூகை
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
ஆலிஸின் அற்புத உலகம்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
நாற்கரம்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
தடை செய்யப்பட்ட புத்தகம்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
கரியோடன்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
நீதி - ஒரு மேயாத மான்
கதவு திறந்தததும் கடல் 


Reviews
There are no reviews yet.