இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்
தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்						 நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்						 சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம்						 குமாயுன் புலிகள்
குமாயுன் புலிகள்						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 அந்தக் காலத்தில் காப்பி இல்லை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை						 இருட்டு எனக்குப் பிடிக்கும்
இருட்டு எனக்குப் பிடிக்கும்						 எனது தொண்டு
எனது தொண்டு						 இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)						 புனிதாவின் பொய்கள்
புனிதாவின் பொய்கள்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்						 நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்						 கூடுசாலை
கூடுசாலை						 என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 சாப பூமி
சாப பூமி						 ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்						 காற்றின் உள்ளொலிகள்
காற்றின் உள்ளொலிகள்						 கார்மலி
கார்மலி						 தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)						 அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்						 டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்						 ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)						 Great Indians
Great Indians						 கரப்பானியம்
கரப்பானியம்						 ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்						 108 வைஷ்ணவ திருத்தல மகிமை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						


Reviews
There are no reviews yet.