Idhayam kavarum enna siragugal
தோண்டத் தோண்ட ஊற்றிலிருந்து புது நீர் வற்றாமல் சுரந்துக் கொண்டே இருப்பதுபோல இவரிடமிருந்து வற்றாத அறிவுச் செல்வம் கேட்பவர்கள் செவிக்கு விருந்தளிக்கும் விதமாக, அறிவுப் பசியைத் தீர்த்து வைக்கும் விதமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். இவர் வானொலியில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகாக வழங்கிய 53 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.இளசை சுந்தரம் அவர்கள் தன் சொற்பொழிவுகளின்போதும் வானொலியில் வழங்கும் கருத்துரைகளின் போதும் வஞ்சகமில்லாமல் வாரி வாரி வழங்கும் செய்திகள் மனிதனை மேம்படுத்தி அவனை அறிவிலும், பண்பிலும் அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு செல்பவையாக இருக்கின்றன என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் 
Reviews
There are no reviews yet.