சோமு என்னிடம் முன்னுரை கேட்டு இக்கதைகளின் பிரதியைக் கொடுத்துவிட்டு நான் படித்தேனா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளவே பல நாட்கள் போராடிக்கொண்டிருந்தபோது ‘கதையாக வந்திருக்கா?’ என்றுதான் திரும்பத் திரும்பக் கேட்டார். கதையாக வராட்டிதான் என்ன? ஒரு மனிதன் தன் அனுபவங்களை சக மனிதரிடம் பகிர்ந்துகொள்ளவே எழுதலாமே. அப்படித்தான் இந்தக் கதைகளும்/கட்டுரைகளும். கோவில்பட்டியில் பெரியவரான பிறகான வாழ்க்கையும், மாணவப் பருவத்தில் திருநெல்வேலிபாளையங்கோட்டையில் அமைந்த வாழ்க்கையும் பின்திரையாக இருக்க சோமு அதில் எண்ணற்ற சித்திரங்களைத் தீட்டிச் செல்கிறார். இவற்றை இலக்கியமாக்கிவிட வேண்டும் என்கிற யத்தனம் அவரிடம் இல்லை . அதுவே இந்த எழுத்துக்களின் பலமுமாக அமைகின்றது.
Reviews
There are no reviews yet.