1801 – நாவல்
இந்திய சுதந்திர வரலாற்றில் விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட போராளிகளே.
தென்னிந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801-ஆம் ஆண்டு நடத்திய போராட்டமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாகும். ஆங்கிலேயர்கள் மிக அதிகமான மனித இழப்புகளை சந்தித்ததும் இந்தப் போர்க்களத்தில்தான். இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் முதன்முதலில் நாடுகடத்தப்பட்டதும் இப்போரில் தான்.
உலகம் முழுக்க நடந்த விடுதலைப் போர்களின் விழுச்சிக்குப் பல காரணங்கள் இருந்துள்ளன. தென்னிந்திய விடுதலைப் புரட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது சில தனி நபர்களின் துரோகம் மட்டுமே. சில நூறு பணங்கள், சிறு துண்டு நிலம், ஆசை வார்த்தைகள், அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என ஆங்கிலேயர்கள் விரித்த வலையில் விழுந்து துரோகிகளாக மாற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.
முதல் இந்திய சுந்தந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18 – ஆம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டிஷ் இந்தியக் கால தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்கள் விவரிக்கப்பட்ட நாவலே ’1801.

பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் - காலச்சுவடு கட்டுரைகள்
வாக்குமூலம்
நீங்களும் கோர்டில் வாதடலாம்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
புத்தரும் அவர் தம்மமும்
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
கருங்குயில்
முல்லா கதைகள்
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
சாரஸ்வதக் கனவு
எனக்கு நிலா வேண்டும்
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
மலரும் நினைவுகள்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
மறுபடியும் கணேஷ்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
தெய்வங்களும் சமூக மரபுகளும்
மலை மேல் நெருப்பு
மானம் மானுடம் பெரியார்
வண்ணக்கழுத்து
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
நீராம்பல்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
நாயகன் - நெல்சன் மண்டேலா
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
ஞானமலர்கள்
வேதாளம் சொன்ன கதை
வசந்த மனோஹரி
மறுப்புக்கு மறுப்பு
சிரிப்பாலயம்
அவர்கள் அவர்களே
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
மகாத்மா காந்தி
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
உயிரில் கலந்த உறவே
விக்கிரமாதித்தன் கதைகள்-2
நன்றி சொல்லிப் பழகுவோம்!
அடி
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1 - 2)
வாராணசி
நாயகன் - அம்பேத்கர்
எதுவாக இருக்கும்?
என் மாயாஜாலப் பள்ளி
பெரியார் கொட்டிய போர் முரசு
மால்கம் X: என் வாழ்க்கை
தொண்டா துவேஷமா?
அகவிழி திறந்து
மனத்தில் மலர்ந்த மடல்கள்
வாழ்தல் ஒரு கலை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
பெரியாருடன் வீரமணி
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
வெண்ணிலவே வருவாயோ....
இது ஒரு காதல் மயக்கம்
மன நலமே மாமருந்து
தென்னாடு
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
யானைக்கனவு
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
செல்வம் சேர்க்கும் வழிகள்
யாரோ சொன்னாங்க
மனசே... மனசே...
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
மாயமான்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
தொலைவில் உணர்தல்
நாங்கள் அவர்கள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
தேய்புரி பழங்கயிறு
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
மனிதப் பிழைகள்! (நாவல்)
வகுப்பறைக்கு வெளியே
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
நாடிலி 
Kmkarthi kn –
1801
மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப
அகநி வெளியீடு.
சென்ற ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான போட்டியில் சூல் நாவலுக்கும் இந்த 1801 எனும் நாவலுக்கும் இடையே பலத்த போட்டியிருந்தது என்ற செய்தியின் காரணமாக ஈர்க்கப்பட்டே இந்த புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகத்தை வாசிக்க கையில் எடுக்கும் வரையிலுமே இந்த புத்தகம் எதைப்பற்றியது என அறியாதவனாகவே இருந்தேன். அதனாலயே இதை வாசிக்க இத்தனை தாமதமாகிவிட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடுவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. அப்போதே நாவலின் போக்கை நமக்கு தெளிவாக உரைத்துவிடுகிறார். 1801 ம் ஆண்டு சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில் காட்டுக்குள் மருது சகோதரர்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை நோக்கித்தான் நாவல் நகரும் என தெளிவான பாதையை வாசகருக்குக் கடத்துவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதற்கான சொக்குப்பொடியை தூவிக்கொண்டே செல்வது தான் சிறப்பு.
இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப்போர் என்றால் அது காளையார் கோவில் காட்டுக்குள் 1801ல்நடந்த போர் தான் என்கிறார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் மக்கள் பங்குபெறவில்லை, ஆனால் இந்தப் போரில் சிவகங்கைச் சீமையின் மொத்த மக்களும் பங்கு கொண்டனர் என்கிறார். அதற்கு ஆதாரமாக போர் முடிந்தவுடன் ஊரின் அனைத்து மக்களிடமும் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, இனிமேல் எந்த புரட்சியிலும் ஈடுபடமாட்டேன் என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஒப்பந்தம் போடப்பட்டதையும் குறிப்பிடுகிறார்.
நாங்குநேரி முதல் பூனே வரை உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக சின்னமருது போர் புரிந்த சம்பவத்தையும் அதற்கு சான்றாகச் சொல்கிறார். இந்த நிகழ்வுக்கு முன் இத்தனை பெரிய ஒருங்கிணைந்த போர் கம்பெனிக்கு எதிராக நடந்ததில்லை என்பதும் வரலாறு. அதுபோக போர்ப்பிரகடணம் ஒன்றையும் சின்ன மருது தயாரித்திருக்கிறார். அதாவது தாங்கள் எதற்காக போர் புரிகிறோம், தங்களின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக சுவரொட்டிகளின் மூலம் மக்களுக்கும் கம்பெனிக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த நிகழ்வுகளையெல்லாம் ஆதாரங்களாகக் காட்டி இது தான் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என முரசு கொட்டுகிறார்.
வரலாறுனா வெறும் பாடபுத்தக வரலாறு மட்டுமே தெரிந்த என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இதன் தகவல்கள் ஒவ்வொன்றும் வைடூரியங்கள்.
1800 – 1801 ம் ஆண்டுகளுடைய நிகழ்வுகளை மட்டும் தொகுக்காமல் அந்த நிகழ்வுக்கு எதுவெல்லாம் காரணமாயிருந்தது என ஆற்காடு நாவப்பிலிருந்து துவங்கி கௌரி வல்லபர் வரை எந்த ஒரு சின்ன நிகழ்வையும் விட்டுவிடக்கூடாது என்ற ஆசிரியரின் அக்கறை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
ஆற்காடு நவாப், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பூலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலுநாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி, விருப்பாட்சி கோபால் நாயக்கர், திருவிதாங்கூர் சமஸ்தானம், துத்தாஜி வாக் என நாவலில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வரலாறையும் கொண்டுவந்து மருதுபாண்டியர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார். அதுவும் காவல் கோட்டம் படித்த கையோடு இதைப் படித்தால் அதன் நீட்சியாக இதை உணர்வீர்கள்.
காவல் கோட்டம் நாவலில் விஜயநகரப் பேரரசின் குரல்வளை எவ்வாறு நெரிக்கப்பட்டது என்பதைச் சொல்வதாகக் கொண்டால், இந்த 1801 நாவலில் நெரிக்கப்பட்ட குரல்வளையின் கடைசி சுவாசத்தை பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம்.
இந்த நாவல்ல ஒரு வரி இப்படி வரும் கம்பெனி தன் படையில் வீரர்களை உருவாக்குவதை விட எதிரிகளின் படையில் துரோகிகளை விரைவிலேயே உருவாக்கி விடுகிறார்கள் என்று, அது எத்தனை பொருத்தமான வார்த்தை என்பதை வரலாறு இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த நாவலின் சில பகுதிகளோடு எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அதை புனைவு எனக் கருதி பெரிதுபடுத்தாமலும், வரலாறை முக்கியத்துவப்படுத்த எண்ணியும் சில தவறுகளையும், பிழைகளையும் சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.
கண்டிப்பாக தமிழர்கள் ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு என்பதால் கட்டாயம் நாவலை வாசிக்க முயற்சி செய்யுங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..
#Kmkarthikeyan_2020-57