ADUTHA VEEDU AYMBADHU MILE
பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொள்ளும் தி. ஜானகிராமன் நூலில் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும். இந்த நோக்கத்தைக் கடந்து ஆஸ்திரேலியப் பயணத்தின் வரலாற்றையும் புவியியலையும் மனித வாழ்க்கையையும் ஒளிரும் சான்றுகளுடன் முன்வைக்கிறார். எங்கேயும் மனிதர்கள் ஒரே போன்றவர்கள் என்று தமது அனுபவங்களின் மூலம் தி.ஜா. உணர்கிறார். நமக்கும் உணர்த்துகிறார்.
Reviews
There are no reviews yet.