இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

நகுலன் வீட்டில் யாருமில்லை
ஆ'னா ஆ'வன்னா
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
கொரோனா வீட்டுக் கதைகள்
மாக்பெத்
கோமகனின் 'தனிக்கதை'
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
உயிரளபெடை
குடிஅரசு கலம்பகம்
ரகசிய விதிகள்
அவதாரம்
திராவிட இயக்க வரலாறு
மரணத்தின் பின் மனிதர் நிலை
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
திராவிடம் அறிவோம்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
கடைசிக் களவு
லெனின் வாழ்வும் சிந்தனையும்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
தொடுவானம் தேடி
நமது குறிக்கோள் தொகுதி - 2
இந்து தேசியம்
லிபரல் பாளையத்து கதைகள்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
ஒரு புது உலகம்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
உனது வானம் எனது ஜன்னல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
நேர்மையின் பயணம்
உப்புச்சுமை
கூடுசாலை
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
பொற்காலப் பூம்பாவை
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
நீதிக் கதைகள்
புல்புல்தாரா
1958
வசந்த மனோஹரி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
பெரியார் ஒரு சரித்திரம்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
மரி என்கிற ஆட்டுக்குட்டி
விடுதலை களஞ்சியம் (தொகுதி - 1)
இராவணன் வித்தியாதரனா?
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
அவள் ஒரு பூங்கொத்து
நீடிக்கும் வெற்றி
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் 


Reviews
There are no reviews yet.