இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 சாதியின் குடியரசு
சாதியின் குடியரசு						 அர்த்தசாஸ்திரம்
அர்த்தசாஸ்திரம்						 ஆயிரம் சூரியப் பேரொளி
ஆயிரம் சூரியப் பேரொளி						 தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்நாட்டு நீதிமான்கள்						 பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100						 இயற்கையின் விலை என்ன ?
இயற்கையின் விலை என்ன ?						 குறள் வாசிப்பு
குறள் வாசிப்பு						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 உலக கணித மேதைகள்
உலக கணித மேதைகள்						 பிசினஸ் டிப்ஸ்
பிசினஸ் டிப்ஸ்						 பருவம்
பருவம்						 கலாதீபம் லொட்ஜ்
கலாதீபம் லொட்ஜ்						 பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 பண வாசம்
பண வாசம்						 அஞ்ஞாடி...
அஞ்ஞாடி...						 தீண்டப்படாதார்
தீண்டப்படாதார்						 பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்						 நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்						 அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6						 பொன்னர் - சங்கர்
பொன்னர் - சங்கர்						 மாநில சுயாட்சி
மாநில சுயாட்சி						 தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்						 மரணத்தின் பின் மனிதர் நிலை
மரணத்தின் பின் மனிதர் நிலை						 துளசிதாசர் முதல் மீராபாய் வரை
துளசிதாசர் முதல் மீராபாய் வரை						 யுகத்தின் முடிவில்
யுகத்தின் முடிவில்						 உழைக்கும் மகளிர்
உழைக்கும் மகளிர்						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 பொய்த் தேவு
பொய்த் தேவு						 வயிரமுடைய நெஞ்சு வேணும்!
வயிரமுடைய நெஞ்சு வேணும்!						 சோசலிசம்தான் எதிர்காலம்
சோசலிசம்தான் எதிர்காலம்						 கவிதா
கவிதா						 இரும்புக் குதிகால்
இரும்புக் குதிகால்						 வளமான சொற்களைத் தேடி
வளமான சொற்களைத் தேடி						 சித்தர் பாடல்கள்
சித்தர் பாடல்கள்						 பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்						 ஒற்றன்
ஒற்றன்						 நாயகன் - கார்ல் மார்க்சு
நாயகன் - கார்ல் மார்க்சு						 நகரத்திணை
நகரத்திணை						 சிலிங்
சிலிங்						 பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?						 இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்						 பொது அறிவுத் தகவல்கள்
பொது அறிவுத் தகவல்கள்						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி						 அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						


Reviews
There are no reviews yet.