இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

அரியநாச்சி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
பொன்னர் - சங்கர்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
நாங்கள் வாயாடிகளே
தவளைகளை அடிக்காதீர்கள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
தெனாலி ராமன் கதைகள்
ஏகாதிபத்திய பண்பாடு
செயலே சிறந்த சொல்
திருக்குறள் 3 இன் 1
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
பைசாசம்
மூவர்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
மொழி உரிமை
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
யுகத்தின் முடிவில்
எனும்போதும் உனக்கு நன்றி
நீதிநூல்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
மதமும் மூடநம்பிக்கையும்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
பிரதமன்
லெனின் வாழ்க்கைக் கதை
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ் மலர்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் 6 IN 1
இரும்புக் குதிகால்
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
உன் பார்வை ஒரு வரம்
சம்பிரதாயங்கள் சரியா?
பிரயாணம்
மரபும் புதுமையும் பித்தமும்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அறிவுத் தேடல்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
பனியன்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
சந்திரஹாரம்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
புருஷவதம் 


Reviews
There are no reviews yet.