இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஞானபீடம்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
பேய்த்திணை
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்: சோழர் காலம் (850-1300)
கவிதா
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
சாதியும் நானும்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
எண்ணித் துணிக கருமம்
ஆபத்தில் கூட்டாட்சி
எழுதாக் கிளவி
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
நீதிக்கட்சி இயக்கம் 1917
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
Strike
இரயில் புன்னகை
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
மகா பிராமணன்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
கால பைரவர் வழிபாடு
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
காமாட்சி அந்தாதி
வளமான சொற்களைத் தேடி
மகாநதி
மோகினித் தீவு
இராமாயணக் குறிப்புகள்
தலித்துகளும் தண்ணீரும்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
காஞ்சன சீதை
தமிழ்மொழிக் கல்வி
அவளை மொழிபெயர்த்தல்
வாழ்வியல் சிந்தனைகள்
பாண்டியர் வரலாறு
உணவே மருந்து
பாதை அமைத்தவர்கள்
சின்னு முதல் சின்னு வரை
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
புயலிலே ஒரு தோணி
அன்பாசிரியர்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மீஸான் கற்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
வாசிப்பை சுவாசிப்போம்
ஜீவனாம்சம்
காதல்: சிகப்பு காதல்...
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
யதி
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
புயலிலே ஒரு தோணி 


Reviews
There are no reviews yet.