அசோகமித்திரனின் இந்த புத்தகத்தை நாவல் வரிசையில் சேர்ப்பதை விடவும் வரலாற்று சம்பவங்களை கோர்த்து எழுதிய ஒரு நூல் எனக் கொள்ளலாம். ஐதராபாத் சமஸ்தானம் இந்திய சுதந்திரத்திற்கு கொஞ்ச வருடத்திற்கு முன்பிலிருந்து ஆரம்பிக்கிறது. நூலின் நாயகன் சந்திரசேகரன் கல்லூரி மாணவன். அவனின் குடும்பம் வசிக்கும் லான்சர் பராக்சின் குடியிருப்புகளிலிருந்து ஆரம்பிக்கும் கதைப் போக்கு அவன் படிக்கும் கல்லூரி, அவன் சைக்கிளில் சுற்றிவரும் டாங்க் பண்ட் சாலை, செகந்திராபாத், மோன்டா என கதையின் களம் அமைந்திருக்கிறது.
நகரத்தில் ரஜாக்கர்கள் நடத்தும் அராஜகங்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் க்விட் காலேஜ் இயிஅக்கம் (ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான இயக்கம்) என இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த நிஜாம் பிரதேச இணைப்பு தொடர்புடைய நகிழ்வுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நிஜாம் காலத்து ஐதராபாத்தை அந்த டாங்க் பண்ட் சாலையோரத்தில் நடந்தபடியே குளிர்ந்த காற்றின் சுகந்தத்தோட ரசிக்க வைத்திருக்கிறார். பருவத்தில் ஒரு இளைஞனின் மன ஊசலாட்டங்களை சந்துருவை கருவியாக வைத்து வெளிப்படுத்தியிருக்கும் இடங்கள் அந்த பருவத்தின் நிஜத்தை ஒத்திருக்கின்றன.
காந்தி இறந்த போது அவர்கள் குடும்பமும், அந்த நகரமும், சந்திரசேகரனின் அழுகையும், மன அழுத்தமும் ஒரு சிறு சலனத்தை நம்முடைய மனநிலையிலும் தந்துவிட்டுப் போகிறது. இந்திய யூனியனுடன் நிஜாம் பிரதேசத்தை இணைப்பதற்காக இந்திய யூனியன் அரசாங்கம் நிஜாம் பிரதேசத்தின் மீது ஏற்படுத்திய பொருளாதாரத் தடை. அதன் பலனாக ஏற்படும் தானியத் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் இல்லாததால் கடலையெண்ணையில் ஓடும் நகரப் பேருந்துகள்… பஜ்ஜி, போண்டா சுடும் வாசனையோடு போகும் பேருந்துகள் என அப்போதைய காலகட்டங்களை ஒரு வரலாற்று பதிவாக சந்திரசேகரன் என்னும் மாணவனின் வழியாக தன் பால்ய கால ஐதராபாத்தின் நினைவுகளை அசோகமித்திரன் நம்முடன் பகிர்ந்து கொள்கிற படைப்பு இது.
– ர.கேசவராஜ்

காலங்களில் அது வசந்தம்
அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
வளம் தரும் விரதங்கள்
BOX கதைப் புத்தகம்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
திருவாசகம் பதிக விளக்கம்
தமிழக மகளிர்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
அந்தக் காலம் மலையேறிப்போனது
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
உலகிற்கு சீனா ஏன் தேவை
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
மத்தவிலாசப் பிரகசனம்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
அந்தரத்தில் பறக்கும் கொடி
குருதியுறவு
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
மாயப் பெரு நதி
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
அராஜகவாதமா? சோசலிசமா?
மரபும் புதுமையும் பித்தமும்
ஆலிஸின் அற்புத உலகம்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
மிதக்கும் வரை அலங்காரம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
Excellent Easy English Grammar
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
Indian Heritages: Vol 1
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
அகம்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
காதல்
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.