Priya
 லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம்  நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

நான் நாகேஷ்						
Reviews
There are no reviews yet.