நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

மூன்றே வாரத்தில் X M L கற்றுக் கொள்ளுங்கள்
அந்த நேரத்து நதியில்...
யோகநித்திரை அல்லது அறிதுயில்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
அந்தரத்தில் பறக்கும் கொடி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
திருவாசகம் பதிக விளக்கம்
சப்தரிஷி மண்டலம்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
மிதக்கும் வரை அலங்காரம்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
கதைகள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
உலகிற்கு சீனா ஏன் தேவை
நீலம்
வளம் தரும் விரதங்கள்
சப்தங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
On The Origin Of Species
பழங்காலத் தமிழர் வாணிகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
மத்தவிலாசப் பிரகசனம்
பொன் மகள் வந்தாள்
அசோகர்
புனைவு
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
புனிதாவின் பொய்கள்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
சோசலிசம்தான் எதிர்காலம்
சமஸ்கிருத ஆதிக்கம்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
அம்பேத்கர்
சந்திரஹாரம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
புனைவும் நினைவும்
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
THE POISONED DREAM
அராஜகவாதமா? சோசலிசமா?
ஐந்து விளக்குகளின் கதை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
அடிமனதின் சுவடுகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 
Reviews
There are no reviews yet.