Chemmeen
ராமு கார்யாட்டின் (மலையாளம்) ‘செம்மீன்’ திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. ‘செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்கரைக் கன்னி கருத்தம்மாவின் தூய காதல் கதை;தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை;ஊக்கமும் உற்சாகமும் உருவான சக்தியின் உழைப்புக் கதை;ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை;மேலைக்கடல் அன்னையின் செல்லக் குழந்தைகளது நித்தியக் கதை.எளிய கதாபாத்திரங்களின் சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் ‘செம்மீன்’ தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய இந்தப் புகழ் பெற்ற மலையாள நாவல் 1959ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றுள் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது .பல இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் ஆதரவில் வெளிவந்துள்ளது. தமிழாக்கம் செய்தவர் சுந்தர ராமசாமி.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்						


Reviews
There are no reviews yet.