Dravida aatchi maatramum valarchchiyum
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை வெவ்வேறு குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி என்பது வெறும் எண்களின் உயர்வும், தாழ்வும் அன்று. அது சமுதாயத்தில் நடந்தேறிய, தொடர்ந்து நடந்து வரும் மாற்றம்.இந்த மாற்றத்தை விதைத்தது திராவிட இயக்கமும், அதிலிருந்து தோன்றிய கட்சிகளும்தான். இது எப்படி நிகழ்ந்தது? இதைச் சாத்தியமாக்கியது சமூகநீதி பயணம்தான் என்ற கோணத்தில் பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல ஆய்வறிஞர்கள் எழுதிய 12 கட்டுரைகள் ‘திராவிட ஆட்சி – மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

தாமஸ் வந்தார்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
தோன்றியதென் சிந்தைக்கே.. 

Reviews
There are no reviews yet.