இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
கீதையின் மறுபக்கம்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
இராமாயண சுந்தர காண்டம்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
பாரதியார் கவிதைகள்
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
உனது வானம் எனது ஜன்னல்
யாக்கை
மனுசங்க
கற்பனைச் சிறகுகள்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
அற்றவைகளால் நிரம்பியவள்
ஆலமரத்துப் பறவைகள்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
ரெயினீஸ் ஐயர் தெரு
வகை வகையான அசைவ சமையல்கள்
மாஃபியா ராணிகள்
உணவே மருந்து
சினிமா அரசியலும் அழகியலும்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
உண்மை விளக்கம் (உரை நூல்)
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
பவித்ரஞானேச்வரி ( பாகம் - 1)
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
மௌனி படைப்புகள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
அயலான்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
துயரமும் துயர நிமித்தமும்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
நீங்காமல் தானே நிழல் போல நானே
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
பசலை ருசியறிதல்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
மனைவி சொல்லே மந்திரம்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
சூடு... சொரணை...சுயமரியாதை...
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
உதயதாரகை
கால பைரவர் வழிபாடு
முச்சந்தி இலக்கியம்
துரிஞ்சி
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
மலர் மஞ்சம்
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
இலக்கிய வரலாறு
மன்னன் மகள்
சிங்கமும் முயலும்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
கோடைகாலக் குறிப்புகள்
நோம் சோம்ஸ்கி
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நான் இந்துவல்ல நீங்கள்?
இந்திய நாத்திகம்
தொல்குடித் தழும்புகள்
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிறிய இறகுகளின் திசைகள்
பின்னணிப் பாடகர்
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காலத்தின் கப்பல்
இராஜேந்திர சோழன்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
அர்த்தமுள்ள வாழ்வு
புகழ் மணக்கும் அத்தி வரதர்
உயிரளபெடை
மனப்போர்
அவனி சுந்தரி
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
துறைமுகம்
இன்று
முதல் ஆசிரியர்
மஹாபாரதம்
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
வசந்தத்தைத் தேடி
வஞ்சியர் காண்டம்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
கணிதமேதை இராமானுஜன்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
நில்... கவனி... காதலி...
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
அவன் அவள்
அலர்ஜி
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
உயிரோடு உறவாடு
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
மூவர் தேவாரம் மூலம் முழுவதும்
பறவைக்கோணம்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
பௌத்த வேட்கை
ராணியின் கனவு
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
ஆனந்த நிலையம் 


Reviews
There are no reviews yet.