இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
தமிழக மகளிர்
பயத்திலிருந்து விடுதலை
சூரியன் மேற்கே உதிக்கிறான்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
பரண்
சிலிங்
ஒற்றன்
புனைவின் வரைபடம்
சுந்தரகாண்டம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பயணம் (உலகச் சிறுகதைகள்)
லெனின் வாழ்க்கைக் கதை
சந்தனத்தம்மை
பாடலென்றும் புதியது
ட்விட்டர் மொழி
பிஜேபி ஒரு பேரபாயம்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
வியட்நாம் புரட்சி வரலாறு
ட்வின்ஸ்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
Notes From The Gallows
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
புனைவும் நினைவும்
செம்மொழியே; எம் செந்தமிழே!
கிருமிகள் உலகில் மனிதர்கள்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
குமாயுன் புலிகள்
அபிதான சிந்தாமணி
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
நினைவோ ஒரு பறவை
வற்றாநதி
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
எழுதாக் கிளவி
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
Dictionary of Accountancy and Commerce
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர் 


Reviews
There are no reviews yet.