கொற்கை
ஜோ டி குருஸ்
காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின் மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன் மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். நாவல் காலூன்றி நிற்கும் புவியியல் பரப்பிற்குக் கீழ் உள்ளார்ந்து நிற்கும் சூட்சுமப் பரப்பும் அதனூடே உணர்த்தப்படும் வாழ்வின் பரிமாணங்களும் இதைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அடையாளம் காட்டுகின்றன.
– அரவிந்தன்

கனம் கோர்ட்டாரே!
English-English-TAMIL DICTIONARY
Red Love & A great Love
English-English-TAMIL DICTIONARY Low Priced
Quiz on Computer & I.T.
2600 + வேதியியல் குவிஸ்
Compact DICTIONARY Spl Edition
Moral Stories
Mother
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
2800 + Physics Quiz
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
ARYA MAYA - The Aryan Illusion
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
2700 + Biology Quiz 


Reviews
There are no reviews yet.